ஆடி அமாவாசை திருவிழா


ஆடி அமாவாசை திருவிழா
x

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்ற நிகழ்ச்சியினை நடத்தி வைத்தார். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு கேடயசப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

9- ம் திருநாள் வரை இரவு சாமி சப்பரத்தில் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. முக்கிய திருவிழா 28-ந்தேதி நடக்கிறது. அன்று பகல்1 மணிக்கு சாமி உருகுபலையில் கற்பூர விலாசம் வரும் சிறப்பு காட்சியும், அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பகப்பொன் சப்பரத்தில் சாமி எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது.

29-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல்1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.30-ந்தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருனை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.


Next Story