மகாமுச்சந்தி காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா


மகாமுச்சந்தி காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா
x

நாகை மகாமுச்சந்தி காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை பப்ளிக்ஆபீஸ் ரோடு அனிச்சியக்குடி மகாமுச்சந்தி காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மன் பீங்கான் ரதத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். .நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


Next Story