கோவில்களில் ஆடி மாத ஊஞ்சல் வழிபாடு


கோவில்களில் ஆடி மாத ஊஞ்சல் வழிபாடு
x

கோத்தகிரியில் கோவில்களில் ஆடி மாத ஊஞ்சல் வழிபாடு நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 1-ந் தேதி, ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் ஆடி மாத முதல் நாளான நேற்று மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மனை அமர வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் கோத்தகிரி கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story