வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா
x

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரத்து முன்பு நிறுத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர் வேதநாயகி அம்மன் வீதி உலா நடந்தது. இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, ஸ்லத்தார் கேடிலியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடக்கும் ஆடிப்பூர விழாவில் காலை, இரவு அம்மன் வீதி உலா நடைபெறும்.

1 More update

Next Story