ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ்


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ்
x

சிவகாசியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமர் மனைவி பார்வதி (வயது 41). இவர் ஆலங்குளத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதில் ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுப்பதற்காக அம்மாபட்டியில் இருந்து பஸ்சில் சாத்தூர் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து பஸ்சில் சிவகாசிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வேறு ஒரு பஸ்சில் ஆலங்குளம் செல்ல முயன்றபோது தான் கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை சரி பார்த்த போது அது காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story