கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது


கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
x

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு கொலை வழக்கு தொடர்பாக மறுகால்குறிச்சியை சேர்ந்த போத்தி வானுமாமலை (வயது46) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து அவருக்கு நெல்லை கோர்ட்டு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வானுமாமலையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story