நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

நெல்லை அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் இசக்கிதுரை என்ற கட்டத்துரை (வயது 23). இவரை கொலை முயற்சி வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு தாழையூத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் தாழையூத்து போலீசார், இசக்கிதுரையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





