நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

ஆலங்குளம் அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
முக்கூடல்:
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மாரிராஜ் (வயது 32). இவர் கடந்த 2015-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பாப்பாக்குடி போலீசார் நேற்று மாரிராஜை கைது செய்து பிடியாணையை நிறைவேற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





