கோா்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

கோா்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதங்கள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கங்கைகொண்டான்:
நெல்லை அருகே கங்கைகொண்டான் கலைஞர் காலனியை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 36). இவரை கங்கைகொண்டான் போலீசார் ஒரு வழக்கில் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு சத்தியசீலன் கடந்த 3 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று கங்கைகொண்டான் போலீசார் சத்தியசீலனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





