தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2023 7:00 PM GMT (Updated: 1 Feb 2023 7:00 PM GMT)

தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்


திண்டுக்கல் அருகே உள்ள வேடபட்டியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவருடைய மகன் சைமன்ராஜ் (வயது25). இவரை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூலித்தொழிலாளி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த இவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து சைமன்ராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வேடபட்டியில் சைமன்ராஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சைமன்ராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story