தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவரை திருட்டு வழக்கில் ராதாபுரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒரு மாதம் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோர்ட்டு, குமாருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து ராதாபுரம் போலீசார் நேற்று குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

இதேபோல் நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நாங்குநேரி தாலுகா கீழ தேவநல்லூர் பகுதியை சேர்ந்த காடுவெட்டி கண்ணன் (44) என்பவரை கங்கைகொண்டான் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்னர் அவர் தலைமறைவானார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு காடுவெட்டி கண்ணனை கங்கைகொண்டான் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story