தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 29). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆற்காடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சிலம்பரசன் சென்னை பூந்தமல்லி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் சென்று சிலம்பரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





