நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

கூடங்குளம் பகுதியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு ஆவுடையாள்புரத்தை சேர்ந்த ராகுல் (வயது 23) என்பவரை அடிதடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஒரு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

1 More update

Next Story