நூலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


நூலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x

கோவில்பட்டி நூலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினமான நேற்று கோவில்பட்டி வட்டார நூலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் ரவீந்தர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ, வட்டார நூலகர் அழகர்சாமி, நூலக புரவலர் முத்துப்பாண்டி, நூலக பணியாளர் கலைச்செல்வி மற்றும் வட்ட உறுப்பினர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story