போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x

மன்னார்குடி, கூத்தாநல்லூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி நகராட்சி அரசு மாடல் நடுநிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன், துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதேபோல் கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓகைப்பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னையா முருகையன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story