டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் இறந்தான்.
மேட்டூர்:
கொளத்தூர் அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் சேகர். டிராக்டர் டிரைவர். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 14). இவன் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சேகர் தனது மகனை டிராக்டரில் அழைத்து கொண்டு கருங்கல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வளைவில் திரும்பியபோது டிராக்டரில் இருந்து வெங்கடேஷ் தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதுகுறித்து கொளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





