சங்ககிரி அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் சாவு


சங்ககிரி அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் சாவு
x

சங்ககிரி அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் இறந்தார்.

சேலம்

சங்ககிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி.அணை துவாரகாபுரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 44), இவருடைய மகன் அரவிந்தன் (19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது சங்ககிரி வைகுந்தம் அருகே சென்ற போது அவருக்கு பின்னால் வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அரவிந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதனை ஓட்டிச்சென்ற நபரையும் தேடி வருகிறார்கள்.


Next Story