நாமகிரிப்பேட்டை அருகே வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலி ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் மறியலால் பரபரப்பு


நாமகிரிப்பேட்டை அருகே   வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலி  ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் மறியலால் பரபரப்பு
x

நாமகிரிப்பேட்டை அருகே வாகனம் ேமாதி தச்சு தொழிலாளி பலியானார். வாகனத்தை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே வாகனம் ேமாதி தச்சு தொழிலாளி பலியானார். வாகனத்தை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தச்சு தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சடையன் என்கிற சரவணன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நாமகிரிப்பேட்டைக்கு சென்று விட்டு ராசிபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை- ராசிபுரம் சாலையில் நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி அருேக உள்ள மெக்கானிக் பட்டறை பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் மீது மோதி விட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மணிகண்டனின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் ஆஸ்பத்திரி முன் திரண்டனர். பின்னர் அவர்கள் மணிகண்டன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் கண்டுபிடிக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story