கர்நாடக அரசு பஸ்-கார் மோதல்; ரியல் எஸ்டேட் அதிபர் பலி


கர்நாடக அரசு பஸ்-கார் மோதல்; ரியல் எஸ்டேட் அதிபர் பலி
x

ரெட்டியார்சத்திரம் அருகே கார் மீது கர்நாடக அரசு பஸ் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார்.

திண்டுக்கல்

திருப்பூரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 38). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று இவர், வேலை விஷயமாக திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருப்பூருக்கு புறப்பட்டார். ரெட்டியார்சத்திரம் அருகே திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள கதிர்நரசிங்கபெருமாள் கோவில் பகுதியில் அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே மைசூருவில் இருந்து மதுரை நோக்கி வந்த கர்நாடக மாநில அரசு பஸ், கார் மீது மோதியது. இதில், காரில் வந்த தனசேகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மைசூருவை சேர்ந்த பஸ் டிரைவர் சதீஷ் (45) மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story