லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T15:57:39+05:30)
தர்மபுரி

அரூர்:

அரூரை அடுத்த தண்டகுப்பத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (37). இவர்கள் 2 பேரும் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு அவர்கள் மோட்டார் சைக்கிளில் மொரப்பூரில் இருந்து தண்டகுப்பத்திற்கு சென்றனர். வழியில் அரூர்-மொரப்பூர் சாலையில் எச்.அக்ரஹாரம் பகுதியில் பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரசாந்த் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story