கூட்டாளி கொலை வழக்கு: வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவல் - பேரையூர் கோர்ட்டு உத்தரவு


கூட்டாளி கொலை வழக்கு: வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவல் - பேரையூர் கோர்ட்டு உத்தரவு
x

கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு 5 நாள் போலீஸ் காவலில் வைக்க பேரையூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

பேரையூர்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் என்ற ஈஸ்வரன் (வயது 42). இவரது கொலை வழக்கில் வில்லூர் போலீசார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் நேற்று மீண்டும் வரிச்சியூர் செல்வத்தை பேரையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக வரிச்சியூர் ்செல்வத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டனர். அதற்கு நீதிபதி, 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story