கிராமத்தில் அமைதியை சீர்குலைப்பவர் மீது நடவடிக்கைகலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கிராமத்தில் அமைதியை சீர்குலைப்பவர் மீது நடவடிக்கைகலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x

கிராமத்தில் அமைதியை சீர்குலைப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.

அறச்சலூர் மற்றும் வடுகப்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் பழகி வருகிறோம். இதனால் எங்கள் பகுதி அமைதியாகவும், சுமுகமாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் அறச்சலூர் நல்லமங்காபாளையத்தை சேர்ந்த சமூக நீதி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் வடிவேல் ராமன் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதனால் எங்கள் பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் எண்ணத்தில் செயல்படும் வடிவேல்ராமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Next Story