2 வது திருமணம் செய்ய முயற்சிக்கும் கணவர் மீது நடவடிக்கை


2 வது திருமணம் செய்ய முயற்சிக்கும் கணவர் மீது நடவடிக்கை
x

திட்டக்குடி அருகே 2-வது திருமணம்செய்ய முயற்சிக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் உதவி எண்ணில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

கடலூர்

கடலூர்

வேறுபெண்ணுடன் திருமணம்

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்தவர் சுமதி ஜான்சிராணி(வயது 33). இவர் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தார். அந்த புகாரில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தன்னை கடந்த 3.6.2022 அன்று மதுரையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் என்னை ஏமாற்றிவிட்டு தனது சொந்த ஊரான திட்டக்குடிக்கு சென்று வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ள, ஏற்பாடு செய்து வருகிறார். அதனால் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், திட்டக்குடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மணிகண்டன், எனக்கும் சுமதி ஜான்சிராணிக்கும், மதுரை கோவிலில் நடந்த திருமணம் சம்பந்தமாக நீதிமன்றம் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணபோவதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனவும், தற்போது ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்யமாட்டேன் என கூறினார். மேலும் இதுதொடர்பாக மணிகண்டனிடம், போலீசார் எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story