தீ தடுப்பு குறித்த செயல் விளக்க பயிற்சி


தீ தடுப்பு குறித்த செயல் விளக்க பயிற்சி
x

சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீ தடுப்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் தீத்தொண்டு வார விழாவையொட்டி சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுடர்விழி, உதவி பயிற்சி அலுவலர் சந்தோஷம், பயிற்றுனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரமேஷ்குமார் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் தொழிற் பயிற்சி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போல் பூட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம் பஸ் நிலையம், மயிலாம்பாறை ஆகிய இடங்களிலும் செயல் விளக்க பயிற்சி நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


Next Story