ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் பெண் புகார் மனு


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் பெண் புகார் மனு
x

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்தார்.

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்தார்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி

ஈரோடு சாஸ்திரிநகர் கல்யாணசுந்தரி வீதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஜீவா (வயது 45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முருகன் இறந்துவிட்டதால் வீட்டு வேலை செய்து குடும்பத்தை ஜீவா நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 30-ந் தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் அவருக்கு உடல் நலம் சீராகவில்லை. இதனால் ஜீவாவை மேல் சிகிச்சைக்காக சேலம் அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் தெரிவித்தனர்.

தவறான சிகிச்சை

இந்தநிலையில் ஜீவாவின் தங்கை அமுதா ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஜீவா எழுதி கொடுத்த ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். அப்போது எனக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. என்னிடம் பணம் இல்லாததால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகும் உடல் நலம் சீராகவில்லை. இதுதொடர்பாக டாக்டர்களிடம் கேட்டபோது அறுவை சிகிச்சை செய்யும்போது சிறு தவறு நடந்துவிட்டதாகவும், அதற்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தினால் சேலம் அரசு ஆஸ்பத்திரி அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறும் அலட்சியமாக பதில் அளித்தனர். எனவே தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு தகுந்த மருத்துவ உதவி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ஜீவா கூறிஇருந்தார்.


Next Story