சிங்கப்பெருமாள் கோவில் அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகைகள் பங்கேற்பு


சிங்கப்பெருமாள் கோவில் அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகைகள் பங்கேற்பு
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகைகள் ரோஜா, நமீதா பங்கேற்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஸ்ரீவாரி நகரில் பூதநாத சுவாமி பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட், மற்றும் கயிலை ஸ்ரீசாஸ்தா அய்யப்ப பக்த ஜன சபை இணைந்து அய்யப்பன் கோவில் கட்ட பூமி பூஜை நடத்தியது. ரூ.4 கோடி செலவில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி தற்போது முடிவடைந்த நிலையில் அதற்கான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

கணபதி, அய்யப்பன், மாளிகைபுரத்தம்மன் சன்னதி கோபுரங்கள் மீது பூஜிக்கப்பட்ட நீரை குருவாயூர் கோவில் நம்பூதிரி ஸ்ரீநாத், நாராயணன் நம்பூதிரி பாட் ஊற்றினார்கள் அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரியுமான ரோஜா, திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, திருச்செல்வம், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வேலு, போலீஸ் ஐ.ஜி சுப்புராஜ், முன்னாள் எம்.எல்.ஏ திருக்கச்சூர். கி. ஆறுமுகம், மறைமலைநகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், எதிர் நீச்சல் டி.வி. தொடர் நடிகர் ஞானம் என்ற கமலேஷ், திரைப்பட நடிகை அஞ்சு, திரைப்பட தயாரிப்பாளர் சிங்கை வி.எல்.எஸ். சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பழரசங்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீ காந்த் தேவா, வீரமணி ராஜு ஆகியோரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.


Next Story