9,219 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு


9,219 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
x

9,219 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2023-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தம் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் நேற்று வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 18 வயது நிரம்பியவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, தங்களது வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் 9,219 பேர் புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொண்டனர். தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காத வாக்காளர்கள் 1,179 பேர் படிவம்-6 பி-யில் விண்ணப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொண்டனர்.

படிவம் 7 மூலம் 1,869 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய 4,246 பேர் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். இதன்படி மொத்தம் 16,513 பேர் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் கூடுதல் தகவல் பெறலாம்.


Next Story