வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது.

திருச்சி

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 4-ந் தேதி, 5-ந் தேதி, 18-ந் தேதி மற்றும் 19-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இறுதி பட்டியல்

இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களிலும், அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும், அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடமும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி செல்போன் செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story