வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டப்பிடாரம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடத்தை கூடுதல் கலெக்டரும், மாவட்ட வளர்ச்சி திட்ட அலுவலருமான தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆய்வு செய்து கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் சிலோன் காலனி முதல் குலசேகரநல்லூர் வரை மங்கம்மாள் சாலையில் தார் சாலை அமைக்கும் பணியையும், ரூ.7.43 லட்சத்தில் முப்பிலிவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையலறை கட்டிடத்தையும் ஆய்வு செய்தார்.

அப்போது ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் ராமராஜ், யூனியன் உதவி பொறியாளர் ரவி உட்பட யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story