அடைக்கலம் காத்த அம்மன் கோவில் மாசி திருவிழா


அடைக்கலம் காத்த அம்மன் கோவில் மாசி திருவிழா
x

அடைக்கலம் காத்த அம்மன் கோவில் மாசி திருவிழா நடைபெற்றது.

திருச்சி

திருச்சி அருகே முத்தரசநல்லூர் முருங்கபேட்டையில் அடைக்கலம் காத்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 27-ந்தேதி இரவு அம்மனுக்கு பெருங்காப்பு கட்டப்பட்டது. 28-ந்தேதி இரவு காளிவட்டம் நிகழ்ச்சியும், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் எல்லைக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 1-ந்தேதி காலை அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், 2-ந் தேதி இரவு மின் அலங்காரத்தில் மற்றும் திருத்தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதலுடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவுபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story