ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நெல்லையில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருநெல்வேலி

ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்படும். இந்த நிலையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவிலில் நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

இதேபோல் நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில், கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் நேற்று ஆடிப்பூரம் என்பதால் கோவில்களில் அம்மனுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு வளைகாப்பு வைபவமும் நடந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலுள்ள பல சுடலைமாடசாமி கோவில்களில் நேற்று கொடை விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story