அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
x
வேலூர்

விஜயதசமி தினத்தன்று எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. அதனால் பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமியன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். விஜயதசமி தினத்தன்று கல்வி, கலைகள் என்று எதை தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது.

விஜயதசமியான நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளின் கையை பிடித்து அரிசி, நெல்லில் தாய்மொழியான தமிழ்மொழியின் முதல் எழுத்தான 'அ' எழுத கற்றுக்கொடுத்து பள்ளியில் சேர்த்தனர். வேலூர் மாவட்டத்தில் 510 அரசு தொடக்கப்பள்ளி, 151 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 118 அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் தொடக்கப் பள்ளிகளில் நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது. பல பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது. அரசு தொடக்கப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் கொண்டு வந்து சேர்த்தனர்.


Next Story