முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை


முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை
x

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க 10-ந்தேதி கடைசி நாள்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

முதுகலை பாடப்பிரிவுகள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துறைகளில் ஒருங்கிணைந்த முதுகலை பாடப்பிரிவுகளில் பயில்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது.

மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மாணவர்கள் சேர்க்கை பெறும் விதமாக, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நாள் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளம் திறக்கப்பட்டு 10 தினங்கள் வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான தனி கலந்தாய்வு பின்னர் நடைபெறும்.

அறிவியல் பாட பிரிவுகளான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிர் தொழில்நுட்பவியல், சுற்றுச்சூழல் அறிவியல், கடல்சார் அறிவியல் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு பல்கலைக்கழக வ.உ.சி. அரங்கத்திலும், வணிகவியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கத்திலும் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் ஒன்றினை கையில் வைத்திருக்க வேண்டும். தேர்வு பெறும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை அங்கேயே வங்கி கவுன்ட்டரில் செலுத்தி கொள்ளலாம். மேலும் விடுதி வசதி தேவைப்படும் மாணவர்களும் விடுதி கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌.

கடைசி நாள்

2 வருட முதுகலை பாடப்பிரிவுகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆகும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வானது வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) பல்கலைக்கழகத்தின் அந்தந்த துறைகளில் வைத்து நடைபெறும்.

இதுபற்றிய விவரங்களை அந்தந்த துறை தலைவர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ தெரிவிப்பார்கள். மற்ற விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.இந்த தகவலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


Next Story