அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

திருப்பத்தூர்

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து வாணியம்பாடி பஸ்நிலையத்தில் வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், நகர செயலாளர் சதாசிவம், பேரூராட்சி செயலாளர்கள் சரவணன், சிவக்குமார், நகர துணை செயலாளர் கோவிந்தன், நகர மன்ற உறுப்பினர் ஜகீர் அகமது, சங்கர், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், குமார், லிங்கநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story