பெரியார் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


பெரியார் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:46 PM GMT)

பெரியார் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கோயம்புத்தூர்


தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கோவை ஹூசூர் ரோட்டில் உள்ள இதயதெய்வம் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாள ருமான எஸ்.பி. வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பெரியார் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


Next Story