அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 7:15 PM GMT (Updated: 21 Jun 2023 7:15 PM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு பாதிப்புகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை தாங்கி பேசினார். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. பார்த்திபன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து மூதாட்டிகள் சிலர் தலையில் மண் பானைகளை சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் ஆர்ப்பாட்ட மேடையில் நின்ற மகளிரணியினரிடம் அந்த பானைகளை கொடுத்தனர். அவர்கள் அந்த பானையை கையில் வைத்துக் கொண்டு கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் குறிஞ்சிமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தவமணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story