விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் சாவு


விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் சாவு
x

மூலைக்கரைப்பட்டியில் நடந்த விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இறந்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.அசோக்குமார் (வயது 60). இவர் கடந்த மாதம் 11-ந் தேதி தனது மோட்டார்சைக்கிளில் அரசனார்குளம் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த மேலஅரியகுளத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 27), ஹரிஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே மூலைக்கரைப்பட்டி போலீசார் 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அசோக்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story