முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோட்டாட்சியர் பவுலின் கலந்து கொண்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதின உறுதிமொழியினை வாசித்தார் இதனை வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.தினமும் மனரீதியாக காயப்படுத்தும் வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என உறுதி கூறுகின்றேன் எனவும் உறுதிெமாழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார்கள் ரமேஷ், வேதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story