வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:45 PM GMT)

வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதை ரத்து செய்யக்கோரிவக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், புதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி நேற்று முதல் 5 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வக்கீல் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று மாயூரம் வக்கீல் சங்கத் தலைவர் ஜெகதராஜ், மயிலாடுதுறை வக்கீல் சங்கத் தலைவர் வேலு.குபேந்திரன் ஆகியோர் தலைமையில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக 400-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணிக்குச் செல்லாததால், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட 8 நீதிமன்றங்களும் செயல்படவில்லை. இதனால் வழக்கமான நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.


Next Story