ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்


ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
x

தாணிக்கோட்டகத்தில் ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தாணிக்கோட்டகத்தில் ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆகாயத்தாமரை

நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் முதல் ஆதனூர் வரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகளில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீரை தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.

நெற்பயிர்கள் பாதிப்பு

மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

அகற்ற வேண்டும்

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story