வான் நோக்குதல் நிகழ்ச்சி


வான் நோக்குதல் நிகழ்ச்சி
x

திருப்பத்தூரில் வான் நோக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

சர்வதேச நிலா நோக்கு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி வான்நோக்குதல் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாதிரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வானியல் அறிவியல் மன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியருமான நித்யா மாணவர்களுக்கு தொலைநோக்கி பற்றியும் நிலவு மற்றும் அதன் மேற்பரப்பு பற்றியும் அடிப்படை கருத்துக்களை எடுத்து கூறினார். மேலும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். இதில் 215 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story