30 மாவட்டங்களில் பாதிப்பு: தமிழ்நாட்டில் 198 பேருக்கு கொரோனா


30 மாவட்டங்களில் பாதிப்பு: தமிழ்நாட்டில் 198 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 198 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர்.

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 198 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 92 ஆண்கள் மற்றும் 106 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 63 பேருக்கும், செங்கல்பட்டில் 25 பேருக்கும், கோவையில் 16 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகளில் மலேசியாவில் இருந்து வந்த 2 பேர், புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 30 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,086 ஆக உள்ளது.

அதே சமயத்தில் 8 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் ஏதுமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story