8 மாவட்டங்களில் பாதிப்பு; தமிழ்நாட்டில் 13 பேருக்கு கொரோனா


8 மாவட்டங்களில் பாதிப்பு; தமிழ்நாட்டில் 13 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 8 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 3 பேருக்கும், கோவையில் 2 பேரும் வெளிநாட்டு பயணிகள் 2 பேர் உள்பட மொத்தம் 8 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 89 ஆக உள்ளது. நேற்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை.


Next Story