இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்


இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்
x

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வாழ முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இலங்கை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு தமிழகத்திற்கு தப்பி வர முயன்ற 7 அகதிகளையும் மற்றும் 2 படகோட்டிகளையும் இலங்கை கடற்படையினர் படகுடன் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இலங்கையில் இருந்து இதுவரை 90-க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story