வெளிநாட்டு பணத்துடன் சிக்கிய ஏஜெண்டு


வெளிநாட்டு பணத்துடன் சிக்கிய ஏஜெண்டு
x

வெளிநாட்டு பணத்துடன் ஏஜெண்டு சிக்கினார்.

திருச்சி

ஹவாலா பணம்

சென்னையில் இருந்து ஒரு நபர் ஹவாலா பணத்துடன் திருச்சிக்கு நேற்று முன்தினம் பஸ்சில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் சென்னை பஸ்சில் இருந்து கையில் பையுடன் இறங்கி ஒரு ஓட்டல் அருகில் வந்து நின்று கொண்டிருந்தார்.அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 600 மதிப்புள்ள யுரோ, ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூ.1 லட்சம் இந்திய பணம் ஆகியவை இருந்தது.

பறிமுதல்

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி உறையூர் குழுமணி ரோடு மங்கள் நகர் வி.கே.ஆர்.காலனியை சேர்ந்த அஷ்ரப் அலி (வயது 44) என்பதும், அவர் வெளிநாட்டு பணத்தை வாங்கி இந்திய பணமாக மாற்றி கொடுக்கும் ஏஜெண்டாக செயல்படுவதும் தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து வெளிநாட்டு பணம் உள்பட ரூ.11 லட்சத்து 57 ஆயிரத்து 600-ஐ பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பணம் ஹவாலா பணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Next Story