மேம்பாலம் அமைக்கும் பணி: கூட்டேரிப்பட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்


மேம்பாலம் அமைக்கும் பணி:  கூட்டேரிப்பட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

மேம்பாலம் அமைக்கும் பணியின் காரணமாக கூட்டேரிப்பட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

விழுப்புரம்

மயிலம்,

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நான்கு முனை சந்திப்பு உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மயிலம்-தீவனூர் சாலை சந்திக்கும் பகுதியாக இருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மயிலம், தீவனூர் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வபோது விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் விபத்துக்களையும், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் வகையில் கூட்டேரிப்பட்டு பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியது.

இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள வீடு, கடைகள், குடிநீர் தொட்டி உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story