ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டார தலைவர் ரஜினி வரவேற்றார். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story