தஞ்சையில், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில், காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர்கள் ஜாகிர்உசேன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் குமரி மகாதேவன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.


Next Story