அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 7:00 PM GMT (Updated: 28 March 2023 7:00 PM GMT)

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் அந்துவண்சேரல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கியது அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் வருவாய்த்துறை சங்க மாவட்ட செயலாளர் தனஞ்செயன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story