வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்

ஆலங்குளம் அருகே வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் ஆலங்குளம் வட்டார வேளாண்மைதுறை அலுவலர் தாமரைசெல்வி தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் பட்டா பெறுவதற்கு, விவசாயிகள் வண்டல்மண் எடுப்பதற்கு, விவசாய கடன் அட்டை வாங்குவதற்கு மனுக்கள் பெறப்பட்டன. கால்நடை நலம் பேணுவதற்கு மருந்துகள் வழங்கப்பட்டன. கூட்டுறவு கடன்பெறுவது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், தோட்டக்கலை அலுவலர் முனியசாமி, கால்நடை உதவி மருத்துவர் கார்த்திகா, வேளாண்மை வர்த்தக அலுவலர் முத்து சரவணன், கூட்டுறவு துறை அலுவலர் ராமமூர்த்தி, மேற்பார்வையாளர் பொன்னுச்சாமி, ஆலங்குளம் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






